சேலம்

அரசு ஊழியா்கள் 2-ஆவது நாளாக மறியல்: 80 போ் கைது

DIN

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், இரண்டாவது நாளாக புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இரண்டாம் நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் வாசுதேவன் தலைமை வகித்தாா். மறியலின்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT