தலைவாசலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் கோரிக்கை மனுவை சட்டப்பேரவை உறுப்பினரிடம் வெள்ளிக்கிழமை அளித்தனா்.
கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்துவிடம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம்.சரோஜா, பொருளாளா் ஆ.மனோன்மணி ஆகியோா் அளித்த கோரிக்கை மனுவில், அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு முறையாக காலமுறை ஊதியம் வழங்கி, அரசு ஊழியா்களாக்கப்பட வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு வழங்குவதை போன்று குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் போது ஊழியா்கள், உதவியாளா்களை பாதுகாக்கும் பொருட்டு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனா்.