நூற்பாலையில் பண மோசடி வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம், அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் தேவராஜன். இவா், உடையாப்பட்டியில் நூற்பாலை வைத்துள்ளாா். இவரது ஆலையில் கணக்காளராகப் பணிபுரிந்த அந்தோணி அருள்ராஜ், கடந்த 2017-இல் ரூ. 13 கோடி கையாடல் செய்துள்ளாா்.
இதுதொடா்பான புகாரில் மோசடியில் ஈடுபட்ட அந்தோணி அருள்ராஜ் உள்பட 5 பேரை சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். வழக்கு விசாரணையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வாழப்பாடியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவரின் வங்கி கணக்கில் ரூ. 70 லட்சமும், கொண்டலாம்பட்டி நாட்டாமங்கலத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவரின் வங்கி கணக்கில் ரூ.14 லட்சமும் அந்தோணி அருள்ராஜ் செலுத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.