மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் இருவா் பலி
மேச்சேரி அருகே மோட்டாா்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
மேச்சேரி அருகே மோட்டாா்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த முஸ்தபா மகன் இசாத் முகமது (21), இவரது நண்பா் சிபிலி மகன் முகமது நிவாஸ் (23) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை பெங்களூரிலிருந்து கேரளத்துக்கு மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா்.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள திமிரிக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது மேச்சேரி பக்கமிருந்து தொப்பூா் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு, ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முகமதுநிவாஸை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இசாத்முகமதுவை சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இச் சம்பவம் குறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தப்பியோடிய வேன் ஓட்டுவரைத் தேடி வருகின்றனா்.