முகப்பு
உலகம்

மனித உரிமை மீறல்! 19 ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

19 ஈரானிய அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது குறித்து...

Updated On : 11 மார்ச், 2026 at 2:53 PM
19 ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்...
பகிர்:

ஈரானைச் சேர்ந்த 19 அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகளை விதிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஈரானில், கடந்த 2025 டிசம்பர் மாதம் முதல் நடைபெற்ற மாபெரும் போராட்டங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பல கடுமையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட 19 அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது புதிய தடைகளை விதிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அதிகாரி காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஒடுக்குமுறையின் மூலம் ஈரானின் எதிர்காலம் கட்டமைக்க முடியாது எனவும், இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில், ஐக்கிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

summary

The European Union has approved new sanctions against 19 Iranian officials.

முழு கட்டுரையைப் படிக்க →