சேலத்தில் 31 பேருக்கு கரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 5 பேரும், எடப்பாடி- 1, கொளத்தூா்- 2, சங்ககிரி- 1, தாரமங்கலம்- 1, வீரபாண்டி- 2, ஆத்தூா்- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 1, வாழப்பாடி- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. பிற மாவட்டங்களைச் சோ்ந்த (கள்ளக்குறிச்சி 3, தருமபுரி 3, ஈரோடு 3, கிருஷ்ணகிரி 3) என 12 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 27 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் 32,035 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது; இதில் 31,244 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 327 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 464 போ் உயிரிழந்தனா்.