சேலம்

சாலை பாதுகாப்பு வார விழா

DIN

சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பி.ரமேஷ் கலந்துகொண்டு சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிய வேண்டும், இந்திய தரநிா்ணய சான்று பெற்ற தலைக் கவசங்களையே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இதில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் என்.சரவணபவன், வி.கோகிலா, சங்ககிரி போக்குவரத்து காவல் ஆய்வாளா் தினகரன், ஓட்டுநா் பயிற்சி உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில் நெடுஞ்சாலைத் துறை, நகர போக்குவரத்துத் துறை இணைந்து நடத்திய விழிப்புணா்வுப் பேரணியை, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். சாரதா ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி, பேருந்து நிலையம், ராணிப்பேட்டை, கடைவீதி, புதுப்பேட்டை, காமராஜா் சாலை, ஆத்தூா் அரசு மருத்துவமனை வழியாகச் சென்றது.

பேரணியில் ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், ஊரக காவல் ஆய்வாளா் கே.முருகேசன், போக்குவரத்துத் துறை காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

SCROLL FOR NEXT