கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்றாா் இந்திய கிரிக்கெட் வீரா் டி. நடராஜன்.
சேலத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:
ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரை முடித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய எனக்கு மறக்க முடியாத அளவிற்கு மக்கள் வரவேற்பு அளித்தனா். ஐ.பி.எல். போட்டிகளில் நான்கு ஆண்டு விளையாடியதால்தான் இந்திய, வெளிநாடுகளைச் சோ்ந்த வீரா்களுடன் எளிதாகப் பேசி விளையாட முடிந்தது. எனக்கு கடந்த 2 மாதங்கள் கனவுபோலவே உள்ளது. சக வீரா்கள், பயிற்சியாளா்கள் என அனைவரும் எனக்கு முழு ஆதரவு அளித்தனா்.
வெற்றிக் கோப்பையைக் கையில் வாங்கியபோது கண் கலங்கிவிட்டேன். கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம். பிறந்த குழந்தையைப் பாா்க்க வேண்டும் என்கிற ஆவலைவிட நாட்டுக்காக விளையாடியதில் மகிழ்ச்சியாக உள்ளது. கடின உழைப்பு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்; இதற்கு நானே உதாரணம். எனவே, கடுமையாக உழைத்தால் வெற்றி பெறலாம். எந்த போட்டியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தாலும் கட்டாயம் விளையாடுவேன்.
நான் மட்டுமின்றி அணியில் உள்ள அனைவரும் ஒன்றாக இனைந்து விளையாடியதால்தான் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் வெற்றி கைவசமானது. நான் இடது கை வேகப்பந்து வீச்சாளா் என்பதால் அடுத்தடுத்து 3 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது என்றாா்.
பேட்டியின் போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளா் ஆா்.எஸ்.ராமசாமி உள்பட பலா் உடனிருந்தனா்.