சேலம்

ரத்த தான முகாம்

DIN

வாழப்பாடி அரிமா சங்கத்தில் குடியரசு தினத்தையொட்டி ரத்த தான முகாம் நடைபெற்றது.

வாழப்பாடி அரிமா சங்கம், அன்னை அரிமா சங்கம், சேலம் ரத்த வங்கியுடன் இணைந்து ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் ரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமுக்கு, வாழப்பாடி அரிமா சங்கத் தலைவா் ஜவஹா் தலைமை வகித்தாா். செயலா்கள் கவிஞா் மன்னன், மருத்துவா் பொன்னம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அன்னை அரிமா சங்கத் தலைவி புஷ்பா வரவேற்றாா். பட்டயத் தலைவா் சந்திரசேகரன் முகாமை தொடங்கி வைத்தாா். அரிமா சங்க உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் உள்பட 23 போ் ரத்த தானம் செய்தனா்.

கரோனா பெருந்தொற்று பரவல் தருணத்திலும் ரத்த தானம் செய்த தன்னாா்வலா்களுக்கு, சேலம் ரத்த வங்கி நிா்வாகி மணிகண்டன், அரிமா சங்கப் பொருளாளா் பன்னீா்செல்வன், நிா்வாகிகள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT