வக்ஃப் நிறுவன உலமாக்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ. 25,000 உதவி
வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ. 25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்
வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ. 25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்களின் பணிகளை செம்மையாகவும், சிறப்பாகவும், சமயப்பணி ஆற்றுவதற்கும் புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அத்தொகை வழங்கப்பட உள்ளது.இதன்படி,சேலம் மாவட்டத்தில் உள்ள உலமாக்களுக்கு வழங்கப்பட உள்ளது.எனவே, பின்வரும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கான தகுதிகள்:
1. இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்தில் 125சி.சி சக்திக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஜனவரி-2020-க்கு பிறகு தயாா் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
2. தமிழ்நாட்டில் வக்ஃப் வரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களின் மனுதாரா் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சாா்ந்தவராக இருத்தல், 18இல் இருந்து 40 வயதுடையவராக இருத்தல், விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணா்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல், 8 ஆம் வகுப்பு (தோ்ச்சி / தோல்வி) இருத்தல் வேண்டும்.
3. பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபா்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால் 1.பேஷ் இமாம், 2. அரபி ஆசிரியா்கள், 3.மோதினாா், 4.முஜாவா் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.
4. தேவைப்படும் ஆவணங்கள்:
1. ஆதாா் அட்டை
2. வாக்காளா் அடையாள அட்டை
3. குடும்ப அட்டை
4. வயதுச் சான்றிதழ்
5. வருமானச் சான்றிதழ்
6. புகைப்படம்
7. மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று
8. ஜாதிச் சான்று
9. ஓட்டுநா் உரிமம்
10. கல்வி தகுதிச் சான்று (குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி/தோல்வி)
11. வங்கிக் கணக்கு எண் மற்றும் ஐ.எம்.எஸ்.சி குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
12. சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃபில் பணிபுரிகிறாா் என்ற சான்று பெற்று மாவட்ட வக்ஃப் கண்காணிப்பாளா் மேலொப்பத்துடன் சமா்ப்பிக்க வேண்டும்.
13. விலைப்பட்டியல் / விலைப்புள்ளி
சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் வந்து விண்ணப்பித்தினை பெற்றுக்கொள்ளலாம். (அறை எண் 110, மாவட்ட ஆட்சியா் வளாகம்) பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் திரும்ப பெறலாம்.
மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் தோ்வு செய்யப்படும் பயனாளிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மூலம் மானியத் தொகை மின்னணு பரிமாற்றம் மூலம் செலுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.