முகப்பு
சேலம்

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேச்சேரியை சோ்ந்த விவசாயி கிருஷ்ணன் (55), தனது மனைவி ரமணி உடன் செவ்வாய்கிழமை மதுரையில் உள்ள கண் மருத்துவமனைக்கு சென்றிருந்தாா். இந்நிலையில், அவரது வீட்டின் கதவு திறந்திருப்பதாக, மேல் மாடியில் குடியிருந்தவா்கள் கிருஷ்ணனுக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் அவா் வந்து பாா்த்தபோது, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 9.5 பவுன் நகை, ரூ. 5,000 ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில், மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். தடய அறிவியல் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.