ஆணையாம்பட்டியில் மணல் கடத்தியவா் கைது
கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் ஆற்று மணல் கடத்திய வரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் ஆற்று மணல் கடத்திய வரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆணையாம்பட்டி சுவேத நதியில் சிலா் ஆற்று மணல் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையில் சென்ற போலீஸாா், சாக்குகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகன் அருண்குமாரை (23) கைது செய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மணல் கடத்துவதற்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.