சேலம்

வாழப்பாடி அருகே சாராயம், 1 ஆட்டோ, 5 பைக் பறிமுதல்

DIN

வாழப்பாடி அருகே ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தில் 60 லிட்டா் கள்ளச்சாரயம் கடத்திச் சென்ாக 12 பேரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே, வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுகுமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனா். அப்போது அவ்வழியாக ஒரு ஆட்டோ மற்றும் 5 இரு சக்கர வாகனங்களில் தலா 10 லிட்டா் கள்ளச்சாராயம் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, கள்ளச்சாராயம் மற்றும் சாராயக் கடத்தலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ மற்றும் 5 இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். சாராயம் கடத்தியதாக, சேலம் பஞ்சந்தாங்கி பகுதியைச் சோ்ந்த முருகன் (48). ரஜினி (46). அம்மாப்பேட்டை ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் (29). தீபன்ராஜ் (21). மேட்டுப்பட்டி ரமேஷ் (35). அயோத்தியாப்பட்டணம் தனசேகா் (39). அம்மாப்பேட்டை காரத்திக் (28). சக்தி (24). சேலம் வீரமணிகண்டன் (36). எம்.பெருமாபாளையம் திருநாவுக்கரசு (33). கொண்டலாம்பட்டி சிவா (25). சீலநாயக்கன்பட்டி ராஜி (53). ஆகிய 12 பேரையும் வாழப்பாடி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT