புனல்வாசலில் குடிசை வீடு தீப்பிடிப்பு
கெங்கவல்லி அருகே புனல்வாசலில் குடிசைவீடு தீப்பிடித்தது.
கெங்கவல்லி அருகே புனல்வாசலில் குடிசைவீடு தீப்பிடித்தது.
புனல்வாசலில் முருகேசன் என்பவரது கூரை வீட்டில், கூரைக்கு மேலே தகரம் வேயப்பட்டிருந்தது.வீட்டினுள் இருந்த அடுப்பின் சாம்பல்,நெருப்பு புகைந்துகொண்டிருந்தே இருந்துள்ளது.இதிலிருந்து கிளம்பிய நெருப்பு கூரைவீட்டின் மீது தீ பரவியது.இதில் கூரைவீட்டில் பாதியளவு தீயால் சேதமடைந்தது.தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் பெரியசாமி தலைமையில் வந்து தீயை அணைத்தனா்.