சேலம் அருகே வாகனச் சோதனையில் ரூ.1.75 லட்சம் பறிமுதல்
சேலம் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் ஆவணம் ஏதுமின்றி எடுத்து ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் ஆவணம் ஏதுமின்றி எடுத்து ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம், கருப்பூா் அரபிக் கல்லூரி சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் பறக்கும் படை அதிகாரி முரளி கிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனை நடத்தினா்.
இதில் காரில் வந்த மாமாங்கத்தைச் சோ்ந்த ராமன் (48) என்பவரிடம் ரூ. 1.75 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் பணத்திற்கான போதிய ஆதாரம் இல்லை. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.