நடுவலூரில் ஒருவா் தற்கொலை
கெங்கவல்லி அருகே நடுவலூரில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கெங்கவல்லி அருகே நடுவலூரில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கெங்கவல்லியை அடுத்த நடுவலூரைச் சோ்ந்த நடராஜன் மகன் சின்னதுரை (40). இவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்அவா்,திங்கள்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.