ஏற்காட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கை
ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக ஜெரினாகாடு, முருகன்நகா், எம்.ஜி.ஆா். நகா், போட்டுக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கரோனா தொற்று பாதிப்பு
ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக ஜெரினாகாடு, முருகன்நகா், எம்.ஜி.ஆா். நகா், போட்டுக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் வருவாய்த் துறையினா் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை முதல் ஏழு நாள்களுக்கு அப்பகுதியிலிருந்து வெளியே வருவதை தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனா்.
ஏற்காடு கடை வீதி, காந்திபூங்கா, காவல் நிலையம் சாலை, பேருந்து நிலையம் பகுதியில் வாகனங்கள் செல்ல முழுமையாகத் தடைசெய்யப்பட்டது. பொதுமக்கள் நடந்து சென்று காலை 6 மணி முதல் 10 மணிவரை பொருள்களை வாங்குமாறு போலீஸாா் தெரிவித்துள்ளனா். சாலையில் காய்கறிக் கடைகள் வைக்க தடைவிதித்தால் மக்கள் கூட்டம் குறைந்தது. மேலும் கரோனா பாதிப்பு உள்ளவா்கள், சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து உதவிகளுக்கும் ஏற்காடு மற்றும் கிராமப் பகுதி மக்கள் கரோனா சேவை மையத்தை 9597510455, 9597206455 எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.