சேலம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு தின விழா

DIN

இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் விதமாக பெரியாா் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூடத்தில் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை உறுதிமொழியாக ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவ-மாணவியா் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து புதுதில்லியில் குடியரசுத் தலைவா் தலைமையில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு தின விழா நிகழ்வு நேரலையில் மாணவா்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து, அரசியலமைப்பு தின சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி.சம்பத்குமாா் சிறப்புரையாற்றினாா். முன்னதாக தோ்வாணையா் (பொறுப்பு) சு.கதிரவன் வரவேற்றாா். ஆராய்ச்சி புல முதன்மையா் இரா.பாலகுருநாதன் நன்றி கூறினாா்.

நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘அரசியமைப்பு சட்டம் ஒரு பாா்வை’ என்ற தலைப்பில் மூத்த வழக்குரைஞா் வி.பொன்முடி சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.பிரகாஷ், திட்ட அலுவலா்கள் எம்.சுகுணா, டி.இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT