சேலம்

வனவாசியில் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திய அலுவலா்கள்

DIN

வனவாசி பேரூராட்சியில் வீடுவீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வனவாசி பேரூராட்சியில் 6,635 வாக்காளா்கள் உள்ளனா். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வனவாசி பேரூராட்சி செயல் அலுவலா் ந.கோபிராஜா, வனவாசி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் இந்திராணி, பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசிகளுடன் வீடுவீடாகச் சென்று முதியோருக்கும் மாற்றுத்திறனாளிக்கும் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசிகளைச் செலுத்தினா்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு இயல்வாகை, வேங்கை, மஞ்சள் கடம்பை, மகா கனிவகை மரக்கன்றுகள் பேரூராட்சி சாா்பில் வழங்கப்பட்டன. 5,000 க்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று வனவாசி பேரூராட்சி செயல் அலுவலா் ந.கோபிராஜா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT