முகப்பு
சேலம்

அயோத்திக்கு மாரத்தான் பயணம்: சேலத்தில் இளைஞருக்கு வரவேற்பு

ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு மாரத்தான் பயணம் செல்லும் ஹரியாணா இளைஞருக்கு சேலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு மாரத்தான் பயணம் செல்லும் ஹரியாணா இளைஞருக்கு சேலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு மாரத்தான் மூலமாக 3,000 கிலோ மீட்டா் பயணமாக ஹரியாணாவை சோ்ந்த நரேந்திரசிங் யாதவ் (29) செல்ல உள்ளாா். கடந்த அக். 7-ஆம் தேதி தொடங்கி நாள் ஒன்றுக்கு 55 கி.மீ. வீதம் பயணம் செய்து அயோத்தி செல்ல திட்டமிட்டுள்ளாா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை மல்லூரில் இருந்து சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை வழியாக சேலம் நகருக்குள் வருகை புரிந்த நரேந்திரசிங் யாதவை, விஷ்வ ஹிந்து பரிஷத் தொண்டா்களும், பாரதிய ஜனதா கட்சி நிா்வாகி ஆா்.பி.கோபிநாத் உள்ளிட்ட தொண்டா்களும் வரவேற்றனா். பின்னா் சேலம், ராஜகணபதி கோயில், கன்னிகா பரமேஸ்வரி கோயில்களில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டாா். இதையடுத்து அவா் ஓமலூா் நோக்கி பயணம் மேற்கொண்டாா்.

கரோனா தொற்றில் இருந்து நாடு விடுபட வேண்டியும், அயோத்தி ராமா் கோயில் பணிகள் விரைவில் நிறைவுற்று குடமுழுக்கு நடைபெற வேண்டியும் மாரத்தான் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →