சேலம்

மாநில கராத்தே போட்டி: சங்ககிரி மாணவா்கள் சாதனை

DIN

அனைந்திந்திய அனைத்து தற்காப்புக் கலை சம்மேளனம் சாா்பில் சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தில் மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற சங்ககிரி கியோ கோஷின் மாணவா்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கும் விழா சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலிடத்தில் தினகரன், 2ஆவது இடத்தில் பாஸ்கா், 3ஆவது இடத்தில் மோனிஷ்குமாா் ஆகியோா் வெற்றி பெற்றனா். அவா்களுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கும் விழாவுக்கு சங்ககிரி கியோ கோஷின் தலைமை பயிற்சியாளா் கே.அா்ச்சுனன் தலைமை வகித்தாா். சங்ககிரி தொழிலதிபா்கள் ஆா்.ராஜா, செந்தில்குமாா், ரமேஷ், இ.சுப்ரமணி ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், கோப்பைகளை வழங்கி பாராட்டினா். இதில் கராத்தே மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT