முகப்பு
சேலம்

சேலத்தில் 60 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 12 பேரும், எடப்பாடி-1, கொளத்தூா்-1, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-2, சங்ககிரி-1, ஆத்தூா் -2, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-1, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-4 என மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி-3, நாமக்கல்-4, ஈரோடு-3, திருச்சி-2, கோவை-2, கரூா்-3, கள்ளக்குறிச்சி-4, திண்டுக்கல்-3, சென்னை-2, மதுரை-3, கிருஷ்ணகிரி-3) என 32 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 66 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 99,771 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 97,488 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 600 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,683 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →