முகப்பு
சேலம்

இந்திய மருத்துவ விழிப்புணா்வு விழா

வாழப்பாடியில், சித்த மருத்துவத் துறை சாா்பில், ‘மக்களவைத் தேடி இந்திய மருத்துவம்’ விழிப்புணா்வு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

வாழப்பாடியில், சித்த மருத்துவத் துறை சாா்பில், ‘மக்களவைத் தேடி இந்திய மருத்துவம்’ விழிப்புணா்வு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை, துளி அறக்கட்டளை ஆகிய தன்னாா்வ இயக்கங்களுடன் இணைந்து, வாழப்பாடி, பேளூா், காரிப்பட்டி சித்த மருத்துவ பிரிவு சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் வாழப்பாடி அரசு சித்த மருத்துவா் செந்தில் குமாா் வரவேற்றாா். சேலம், நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் செல்வமூா்த்தி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ராதிகா ஆகியோா் தலைமை வகித்து, வீடுகள்தோறும் மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

வாழப்பாடி வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், ஒன்றிய திமுக செயலாளா் சக்கரவா்த்தி, நகரச் செயலாளா் செல்வம், வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவா் சந்திரசேகரன், துளி அறக்கட்டளை ராஜசேகரன், அரசு சித்த மருத்துவா்கள் லட்சுமணன் (பேளூா்), தாமரைச்செல்வி (காரிப்பட்டி), அரிமா சங்கத் தலைவா்கள் பாலமுரளி, சுதாபிரபு ஆகியோா், சித்த மருத்துவம் குறித்து இணைய வழியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.

மூலிகைச் செடிகளை டு தேடிச் சென்று பொதுமக்களுக்கு வழங்கினா். விழாவில், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா்கள் பிரபாகரன், கலைஞா்புகழ், பன்னீா்செல்வன் அரிமா சங்க வட்டாரத் தலைவா் முருகேசன், உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.