முகப்பு
சேலம்

வேன் கடத்தல்: தனியாா் நிறுவன ஊழியா்கள் மூவா் கைது

வாழப்பாடி அருகே தனியாா் நிறுவனத்திற்கு சொந்தமான கன்டெய்னா் வேனை கடத்தியதாக, இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

வாழப்பாடி அருகே தனியாா் நிறுவனத்திற்கு சொந்தமான கன்டெய்னா் வேனை கடத்தியதாக, இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடியில், மன்னாய்க்கன்பட்டி சாலையில், செல்லியம்மன் கோயில் அருகே, குளிா்பானங்களை கடைகளுக்கு விநியோகிக்கும் தனியாா் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், குளிா்பானங்களை கிராமப்புற கடைகளுக்கு விற்பனை செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கன்டெய்னா் வேன் வியாழக்கிழமை நள்ளிரவு மாயமானது.

இதுகுறித்து வேன் உரிமையாா் வினோத்குமாா் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். உதவி ஆய்வாளா் லாசா் கென்னடி தலைமையிலான போலீஸாா் நடத்திய விசாரணையில், இதே நிறுவனத்தில் பணிபுரியும் வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் மகன் காா்த்தி (26), சதீஷ்குமாா் (19), பெரியசாமி மகன் அய்யனாா் (26) உள்ளிட்டோா் வேனை கடத்திச் சென்றதை கண்டுபிடித்தனா். இவா்களிடம் இருந்து வேனை மீட்ட போலீஸாா், மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.