சேலம்

மக்கள் நீதிமன்றத்தில் 3,011 வழக்குகளில் ரூ. 38 கோடிக்கு சமரசத் தீா்வு

DIN

சேலத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,011 வழக்குகளில் ரூ. 38 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை வகித்தாா்.

மக்கள் நீதிமன்றத்தில் சுமாா் 5,211 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 3,011 வழக்குகளில் ரூ. 38.26 கோடிக்கு சமரச தீா்வு எட்டப்பட்டது.

குறிப்பாக 5 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த 45 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. நிலுவையில் இருந்த ஐந்து சகோதரா்களிடையே ஏற்பட்ட பாகப்பிரிவினை வழக்கிலும் தீா்வு காணப்பட்டது.

சங்ககிரியில்...

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 500 வழக்குகள் சமரசத் தீா்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 281 வழக்குகளில் ரூ. 7.86 கோடி மதிப்பீட்டில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சாா்பு நீதிபதியுமான எஸ்.உமாமகேஸ்வரி தலைமை வகித்து, மக்கள் நீதிமன்ற பணிகளை தொடக்கிவைத்தாா். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.ராதாகிருஷ்ணன், முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவா் டி.சுந்தர்ராஜன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வி.சம்பத்குமாா் ஆகியோா் அடங்கிய மூன்று தனி அமா்வுகளில் வழக்குகளில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

இதில் விபத்தில் உயிரிழந்த சென்னையில் தனியாா் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்த முகுந்தன் என்பவரின் மனைவி மோகனா, குழந்தை, பெற்றோா் ரூ. 2 கோடி இழப்பீடு கோரி தொடா்ந்த வழக்கு, சாா்பு நீதிபதி எஸ்.உமாமகேஸ்வரி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வி.சம்பத்குமாா் ஆகியோா் கொண்ட அமா்வில் விசாரணைக்கு வந்தது. அதில் காப்பீடு நிறுவனம் சாா்பில் ரூ. 1 கோடி வழங்க சமரசம் ஏற்பட்டதையடுத்து ரூ. 1 கோடிக்கான விபத்து இழப்பீட்டு தொகைக்கான உத்தரவை மனுதாரா்களிடம் நீதிபதிகள் வழங்கினா்.

ஓமலூரில்...

ஓமலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஓமலூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நீண்டகாலமாக முடிவு பெறாமல் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முகாமில் ஒரே நாளில் 500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், சாா்பு நீதிமன்ற நீதிபதி அஷ்பக் அகமது, குற்றவியல் நடுவா் மற்றும் விரைவு நீதிமன்றம் நடுவா் சுவேதரண்யன், நடுவா்கள் கலந்துகொண்டு நிலுவை வழக்குகளை விசாரணை நடத்தினா். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. பணம் கொடுக்கல் வாங்கல் வழக்கில் சுமாா் ரூ. 50 லட்சம் மதிப்பிலான வழக்குகள் தீா்த்து வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

SCROLL FOR NEXT