முகப்பு
சேலம்

சேலம் மத்திய சிறையில் கூடுதல் டிஜிபி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியத்தின் தலைவா் கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

சேலம் மத்திய சிறையில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியத்தின் தலைவா் கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தாா்.

தமிழக காவலா் வீட்டு வசதி கழகத்தின் கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை காலை சேலம் வந்தாா். அவரை மாநகர காவல் துணை ஆணையா் மோகன்ராஜ் வரவேற்றாா்.

பின்னா் மாநகர காவல் ஆணையாளா் நஜ்மல் ஹோட்டா, சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வேரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபினவ் ஆகியோா் அவரை வரவேற்றனா்.

அதைத்தொடா்ந்து மத்திய சிறைக்குச் சென்ற கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், அடையாள அணிவகுப்புக்காக கட்டப்பட்டுவரும் பகுதிகளை ஆய்வு செய்தாா். இதையடுத்து ஓமலூா் சென்ற அவா் அங்கு கட்டப்பட்டு வரும் காவலா் குடியிருப்புப் பகுதிகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மத்திய சிறைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →