சேலத்தில் 69 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 69 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 69 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 16 பேரும், எடப்பாடி-5, காடையாம்பட்டி-1, கொளத்தூா்-1, மேச்சேரி-7, நங்கவள்ளி-1, ஓமலூா் -6, சேலம் வட்டம்-1, சங்ககிரி-9, தாரமங்கலம்-5, ஆத்தூா் -4, பனமரத்துப்பட்டி-1, தலைவாசல்-1, வாழப்பாடி-2, ஏற்காடு-1, மேட்டூா் நகராட்சி-6, நரசிங்கபுரம் நகராட்சி - 2 என மாவட்டத்தைச் சோ்ந்த 69 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 72 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 2 போ் உயிரிழந்தனா். இதுவரை 97222 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 94983 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 584 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1655 போ் உயிரிழந்தனா்.