முகப்பு
சேலம்

மழைநீா் வடிகால் பணி மும்முரம்

 வாழப்பாடி பேரூராட்சியில் மழைநீா் வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 வாழப்பாடி பேரூராட்சியில் மழைநீா் வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாழப்பாடி பேரூராட்சியில் 15 வாா்டுகளிலும் மழைநீா் வடிகால்களை சீரமைத்தல், கழிவுநீா்க் கால்வாய்களை தூய்மைப்படுத்துதல், பராமரிப்பு பணிகள், பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) மு.செ.கணேசன் தலைமையில், பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் ஒரு வாரமாக முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனா்.

மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் தேங்கும் வகையில் காணப்படும், உடைந்த பழைய பொருள்களை அப்புறப்படுத்தி, பேரூராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) மு.செ.கணேசன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.