முகப்பு
சேலம்

பண்ணை இயந்திரம் வழங்கல்

கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 2021-22 ஆம் நிதியாண்டில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் பண்ணை இயந்திரம் வழங்குதல் நிகழ்ச்சி ஒருங்கினைந்த வேளாண்மை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 2021-22 ஆம் நிதியாண்டில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் பண்ணை இயந்திரம் வழங்குதல் நிகழ்ச்சி ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அட்மா குழுத் தலைவா் ஏ.கே.அகிலன் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் க.சித்ரா முன்னிலை வகித்து, அரசு கூட்டு பண்ணைய தொகுப்பு நிதி மானியம் ரூ. 5 லட்சம் நிதியுதவியுட ன் கொள்முதல் செய்யப்பட்ட டிராக்டா் இயந்திரத்தை ஆணையம்பட்டி கூட்டு பண்ணைய குழுவுக்கு வழங்கி துவக்கி வைத்தாா்.

உழவா் உற்பத்தியாளா், விவசாயிகள், வேளாண்மை அலுவலா் கல்பனா, உதவி வேளாண்மை அலுவலா் சந்திரசேகரன், தங்கவேல், அட்மா அலுவலா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →