முகப்பு
சேலம்

சங்ககிரி ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை 

சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது . 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:45 PM
சித்ரா பௌர்ணமியையொட்டி சங்ககிரி ஸ்ரீ ஒங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் சுவாமிகளுக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
பகிர்:

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது . 
 
ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில்  சித்ரா பௌர்ணமியையொட்டி ஸ்ரீ ஓங்காளியம்மன் , ஸ்ரீ பேச்சியம்மன், மதுரைவீரன் சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  

பக்தர்கள் சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.  கோயில் நிர்வாகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments