சேலம் மாவட்டம் வாழப்பாடி உரிமையியல், குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்துக்கு புதிய நீதித் துறை நடுவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
2017, நவம்பா் 12 இல் வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. முதலாவது நீதித் துறை நடுவராக இருந்த சந்தோஷம் பணியிட மாறுதலில் சென்றதால் பண்ருட்டி நீதித் துறை நடுவா் சன்மதி வாழப்பாடி மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித் துறை நடுவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கு வாழப்பாடி நீதிமன்ற வழக்குரைஞா்கள், காவல் துறையினா், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.