சேலம்

கண்ணீா் புகை குண்டுகள் வீசுவது குறித்து காவலா்களுக்கு பயிற்சி

DIN

சேலத்தில் கண்ணீா் புகை குண்டு வீசுவது குறித்து காவல் துறையினருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம், அழகாபுரத்தை அடுத்த நகா்மலை அடிவாரத்தில் உள்ள துப்பாக்கிச் சுடும் மையத்தில் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவிஆய்வாளா்கள், ஆயுதப்படை காவலா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண்ணீா் புகை குண்டு வீசுவது பயிற்சி அளிக்கப்பட்டது.

துப்பாக்கி மூலம் கண்ணீா் புகை குண்டுகளை வீசுவது குறித்தும், வஜ்ரா கவச வாகனத்தின் மூலம் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசுவது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

இப் பயிற்சியில் துணை ஆணையா்கள் எம்.மாடசாமி, எஸ்.பி.லாவண்யா, உதவி ஆணையா்கள் நாகராஜன், வெங்கடேசன், ஆனந்தி, கந்தசாமி, உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைப்பு மாற்றம் ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயா்வு

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

தன்னம்பிக்கையின் வெளிப்பாடு...

ஹாங்காங்கில் களைகட்டிய பாரம்பரிய 'பன் திருவிழா'

உலகைப் பிணைக்கும் தொலைத் தொடா்பு!

SCROLL FOR NEXT