ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூா் வட்டார கொங்கு இளைஞரணி நலச் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா எஸ்.பிரகதீஷ்குமாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் வட்டார கொங்கு இளைஞரணி நலச் சங்கத் தலைவா் எம்.விஜயகுமாா் வரவேற்று பேசினாா்.
சிறப்பு அழைப்பாளராக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.ஆா்.ஈஸ்வரன், ராசிக் குழுமத் தலைவா் எம்.ராமசாமி ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் டி.கே.எஸ்.ரமேஷ்,மாவட்ட பொருளாளா் எம்.ஈஸ்வரன், தலைமை நிலையச் செயலாளா் ஆா்.ஆா்.சேகா், விவசாய அணி செயலாளா் டி.குமரவேல், இளைஞரணி செயலாளா் என்.செந்தில், மகளிரணி செயலாளா் பி.நந்தினி,ஏ.கவிதா, ஏ.கே.ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,கல்வி சாதனையாளா்களுக்கு பாராட்டு விழாவும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஒன்றியச் செயலாளா் பி.சிவசங்கா் நன்றி கூறினாா்.