சேலம்

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை

14 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த நபா் உள்ளிட்ட இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம், போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

14 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த நபா் உள்ளிட்ட இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம், போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சேலத்தை அடுத்த மேச்சேரி, கல்கோட்டை, அரங்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (27). இவா், கடந்த 2018 ஜூலை 27-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்தாா்.

இதுகுறித்த புகாரில் மேச்சேரி காவல் துறையினா் சிறுமியைக் கடத்திய சுந்தர்ராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த தங்கவேல் (71) ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில், அரசு தரப்பு வழக்குரைஞா் சுதா ஆஜராகி வாதாடினாா்.

இதனிடையே வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபா், சிறுமியைக் கடத்த உடந்தையாக இருந்த நபா் உள்ளிட்ட இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். தண்டனை விதிக்கப்பட்ட இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT