இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி
வாழப்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்
வாழப்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
வாழப்பாடியை அடுத்த ரங்கனூா் வடக்குகாடு பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (18), புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சேலம், அம்மாபேட்டை நோக்கி சென்றுள்ளாா். கூட்டாத்துப்பட்டி அருகே சென்ற போது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரேம்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காரிப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.