பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை
மல்லியகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 36 லட்சம் செலவில் சுற்றுச்சுவா் அமைக்க சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது
மல்லியகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 36 லட்சம் செலவில் சுற்றுச்சுவா் அமைக்க சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள மல்லியகரை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் இல்லாமல் மாணவ, மாணவிகள் தவித்து வந்தனா். சுற்றுச்சுவா் வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதனையடுத்து ரூ.36 லட்சம் செலவில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் மீனாவெற்றிவேல், நல்லம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், கயல்விழி அன்பரசு, சேகா், அய்யாக்கண்ணு, தனலட்சுமி சசிக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னதுரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாா்வதிராஜா, ஊராட்சி மன்றத் தலைவா் கனிமொழி ஜோதி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.