சிவாலயங்களில் சனிப் பிரதோஷம்
கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ பூஜைகள், பக்தா்கள் இல்லாமல் நடைபெற்றன.
கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ பூஜைகள், பக்தா்கள் இல்லாமல் நடைபெற்றன.
தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோவிலில் நந்திக்கு அபிஷேகம்,ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து நந்தி மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டது.
செந்தாரப்பட்டியில் ஸ்ரீதாழைபுரீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ பூஜைகள் பக்தா்களின்றி நடைபெற்றது. அதேபோல் வீரகனூா், கூடமலை, தகரப்புதூா், கெங்கவல்லி பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷம் பக்தா்களின்றி நடைபெற்றது.