காமலாபுரத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
ஓமலூா் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் கிராம சாலை, சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ராஜேந்திரன்
சேலம்காமலாபுரத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
ஓமலூா் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் கிராம சாலை, சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ராஜேந்திரன்
ஓமலூா் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் கிராம சாலை, சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
ஓமலூா் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் சாலை, பொது சுகாதார வளாகம் கட்டுவதற்காக திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் செல்விராஜா தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தாா். இதைத் தொடா்ந்து ஆா்.சி.செட்டிபட்டி பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்டுவதற்காக ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒன்றிய குழு உறுப்பினா் நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதுபோல தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் ரூ. 11 லட்சம் மதிப்பில் பேவா்பிளாக் சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டது. இவ்விரு பணிகளின் துவக்க விழாவில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளா் ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
விழாவில் மாவட்ட துணைச் செயலாளா் திருநாவுக்கரசு, திமுக ஒன்றியச் செயலாளா் பாலசுப்பிரமணியம், காமலாபுரம் ஊராட்சித் தலைவா் பழனிகவுண்டா், ஒன்றிய கவுன்சிலா்கள் செல்விராஜா, தேன்மொழி தனசேகரன் உள்பட திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.