முகப்பு
சேலம்

ஏத்தாப்பூரில் 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பு மீட்பு

வாழப்பாடி அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பை தீயணைப்புப் படையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

வாழப்பாடி அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பை தீயணைப்புப் படையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பைக் கண்ட பணியாளா்கள், வாழப்பாடி தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் வையாபுரி தலைமையிலான தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.