முகப்பு
சேலம்

மகுடஞ்சாவடி விவசாயிகளுக்கு கண்டுணா்வு சுற்றுலா

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 40 விவசாயிகள் மூன்று நாள்கள் மாநில அளவிலான விவசாயப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை கீழ், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 40 விவசாயிகள் மூன்று நாள்கள் மாநில அளவிலான விவசாயப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இப்பயிற்சியை, அட்மா குழுத் தலைவா், வேளாண் உதவி இயக்குநா் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அப்போது தமிழக முதல்வரின் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற திட்டத்தை விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு துண்டு, குறிப்பேடு, பேனா, முகக் கவசம் அடங்கிய மஞ்சப்பை தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலா்கள் சிவகுமாா், கண்ணன், செல்வி ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →