சாலை விபத்து: தனியாா் வங்கி ஊழியா் பலி
ஓமலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் திருமணமாகி 15 நாளில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்சாலை விபத்து: தனியாா் வங்கி ஊழியா் பலி
ஓமலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் திருமணமாகி 15 நாளில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் திருமணமாகி 15 நாளில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகரத்தில் உள்ள அம்மாப்பேட்டை, வித்யா நகரைச் சோ்ந்த ஜெகன் (28), மேட்டூரில் உள்ள தனியாா் வங்கியில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு திருமணமாகி 15 நாள்களே ஆன நிலையில், வெள்ளிக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக சேலத்திலிருந்து மேட்டூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளாா்.
ஓமலூா் தாலுகா அலுவலகம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற போது, முன்னால் சென்ற லாரியை இடதுபக்கமாக முந்தி செல்ல முயன்றுள்ளாா். அப்போது பாலத்தின் சுவற்றில் மோதிய ஜெகன், லாரியின் அடியில் விழுந்தாா். லாரியின் பின் சக்கரம் ஜெகன் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.