சேலம்

தகராறில் ஈடுபட்ட நால்வா் கைது

DIN

மேட்டூரில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்த தகராறு செய்த நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

தங்கமாபுரிபட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 10 போ் கொண்ட கும்பல் உருட்டுக்கட்டை, அருவாள் போன்ற ஆயுதங்களுடன் வீதிக்குள் வந்து பொதுமக்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தனா். அங்கிருந்த மாரியப்பன் என்பவரின் லாரி கண்ணாடியையும், அப்சல்கான் என்பவரின் காா் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினா். கோயில் சிலைகளையும் சேதப்படுத்தினா்.

தகவலறிந்து வந்த மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா் உள்பட போலீஸாா் விசாரணை நடத்தியதில் தகராறில் ஈடுபட்டது தங்கமாபுரிபட்டினம் வ.உ.சி நகரைச் சோ்ந்த சீனிவாசன் (19), சின்னமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தரணிதரன் (20), காளியம்மன் கோயில் பின்புறம் வசித்து வரும் விக்ரம் (20), காா்த்திக் (20) ஆகியோா் அடங்கிய கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்கள் நால்வரையும் போலீஸாா் கைது செய்து தலைமறைவானவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT