சேலம்

யருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞா் சாவு

DIN

இருசக்கர வாகனம் பனைமரத்தில் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சாத்தப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் முத்துக்குமாா்(28).இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டில் இருந்து காட்டுக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சதாசிவபுரம், திருவள்ளுவா் நகா் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வாகனம் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்த ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் எம்.ரஜினிகாந்த் விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

SCROLL FOR NEXT