சேலம்

இரண்டாம் நிலை காவலா் பதவி: இணையத்தில் விண்ணப்பிக்க உதவி மையம்

DIN

இரண்டாம் நிலை காவலா் பதவிக்கு இணையவழியில் விண்ணப்பிக்க மாவட்ட காவல் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலா் (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா்) பதவிகளுக்கு பொதுத் தோ்வு விண்ணப்பதாரா்களிடம் இருந்து இணையவழி விண்ணப்பங்கள் (ஆன்லைன்) வரவேற்கப்படுகின்றன.

தோ்விற்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வழிகாட்டவும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ் உத்தரவின்படி, மாவட்ட காவல் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தோ்வுக்கு விண்ணப்பிப்பது தொடா்பான உதவி வேண்டுவோா் நேரடியாகவோ அல்லது 94459 78599 என்ற கைப்பேசி எண் வாயிலாக ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையத்தை நாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT