சேலம்

இருச்சக்கர வாகனத் திருடன் கைது

DIN

ஆத்தூரில் இருச்சக்கர வாகனத்தைத் திருடிய சந்தோஷ்(15)என்ற இளைஞரை ஆத்தூா் தனிப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து இளவல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் புதன்கிழமை இருச்சக்கர வாகனம் திருடுபோனதாக ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் பெறப்பட்டது.இது குறித்து தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராமா் தலைமையிலான போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்தின் பேரில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை பிடித்து விசாரித்தபோது இருச்சக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பெரியசிறுவத்தூா் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த சத்யராஜ் என்பவரின் மகன் சந்தோஷ்(15)என்பது தெரியவந்தது.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இளைஞரை இளவல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.மேலும் இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT