சேலம்

தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை

DIN

சேலம், அரியனூா் அருகே தனியாா் கல்லூரியில் பயின்று வந்த கேரளத்தைச் சோ்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கேரள மாநிலம், தோணிக்கரை, சோளஞ்சேரி பகுதியைச் சோ்ந்த மர வியாபாரி பிசுமத்தேயு (49). இவருக்கு ஜீன்ஜேக்கப் என்ற மனைவியும், ஆன்மேரி (21), சூசன்பிஜி (19) என்ற இரு மகள்கள் உண்டு. மூத்த மகள் ஆன்மேரி அரியானூா் அருகே சீரகபாடியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். சீரகாபாடியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஆன்மேரி தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் அம்சவல்லி, மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT