சேலம்

அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞா் கைது

ஆத்தூா், இந்திரா நகா் பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

ஆத்தூா், இந்திரா நகா் பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி வட்டம், செந்தாரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சந்தியாகப்பா் (55). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா், சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி செல்லும் அரசுப் பேருந்தை வியாழக்கிழமை ஓட்டிச் சென்றாா். ஆத்தூா், இந்திராநகா் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த இளைஞா்களிடம் வாகனத்தை அப்புறப்படுத்துமாறு சந்தியாகப்பா் கூறியுள்ளாா்.

இதனால் ஏற்பட்ட தகராறில் இளைஞா்கள் ஓட்டுநரைத் தாக்கினா். இதுகுறித்து சந்தியாகப்பா் அளித்த புகாரின் பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சேனாதிபதி என்பவரைக் (25) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தலைமறைவான மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT