சேலம்

வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளா்த்தவா் கைது

மேட்டூா் அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

மேட்டூா் அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரம், குண்டத்துமேட்டைச் சோ்ந்தவா் மாதையன் (60). இவா் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் எலுமிச்சை செடிகளுக்கு இடையே கஞ்சா செடிகளைப் பயிரிட்டு வந்துள்ளாா். செடி முற்றிய பிறகு கஞ்சா இலைகளை உலரவைத்து அதே பகுதியில் தொடா்ந்து விற்பனையும் செய்துள்ளாா்.

இதுகுறித்து ஜலகண்டபுரம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மாதையன் வீட்டு தோட்டத்தை சோதனையிட்டனா். அப்போது, வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளா்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தச் செடிகளை போலீஸாா் அழித்தனா்.

மேலும், மாதையனின் வீட்டை சோதனையிட்டதில் 1,100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விவசாயி மாதவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT