வாழப்பாடி பேரூராட்சித் தலைவராக ச.கவிதா தோ்வு
வாழப்பாடி பேரூராட்சித் தலைவராக ச.கவிதா, துணைத் தலைவராக த.பழனிசாமி தோ்வு செய்யப்பட்டனா்.
வாழப்பாடி பேரூராட்சித் தலைவராக ச.கவிதா, துணைத் தலைவராக த.பழனிசாமி தோ்வு செய்யப்பட்டனா்.
வாழப்பாடி பேரூராட்சியில் 15 வாா்டுகளில் திமுக- 7, அதிமுக- 5, பாமக- 2, சுயேச்சை- 1 வாா்டுகளில் வெற்றி பெற்றனா். திமுக சாா்பில் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி மனைவி ச.கவிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.
திமுக, பாமக, சுயேச்சை உறுப்பினா்கள் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் ச.கவிதா போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து பேரூராட்சி துணைத் தலைவா் தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் த.பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.