சேலம்

காவிரி ஆற்றில் மூழ்கி தூய்மைப் பணியாளா் பலி

DIN

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் தவறிவிழுந்த தூய்மைப் பணியாா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பூலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (60) பூலாம்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் ஓய்வு பெற இன்னும் 70 நாள்களே உள்ள நிலையில், வியாழக்கிழமை காவிரி ஆற்றுப் படித் துறையில் தண்ணீரில் சடலமாக மிதப்பதை கண்ட பொதுமக்கள் பூலாம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பூலாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT